வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.
அதன்படி நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய, இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதி மோசடி குறித்து கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.