அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்று, மின்னல், கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளது.
கனமழையுடன் பலத்த காற்று வீசுவதால், பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை, மல்வத்தை போன்ற பிரதேசங்களும், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.