துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நியூஸ் சவுத் வேல்ஸ் பொலழஸாரின் வேண்டுகோளின் பேரில், காணாமல் போன ஒருவரை தேடச் சென்ற நான்கு குயின்ஸ்லாந்து பொலிஸ் அதிகாரிகள் குழுவின் மீது, வீடு ஒன்றில் இருந்த 3 பேர் கொண்ட குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, குறித்த வீட்டினது அயல்வீட்டுக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை அடுத்து, பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல்தாரிகள் மூவரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.