ஈக்குவடோர் நில அதிர்வு – 12 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோர் நில அதிர்வு – 12 பேர் உயிரிழப்பு

ஈக்குவடோரின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் 12 பேர் உயிரிழந்தனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 6.7 மெக்னிடியுட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.

சேத விபரங்கள் முழுமையாக வெளியாக நிலையில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரையில் 12 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்