இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான CBL Group குழுமத்தின் தலைவர் ரம்ய சனத் அமரவீர விக்கிரமசிங்க காலமானதாக அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விக்கிரமசிங்க, வெற்றிகரமான ஒரு வணிகத்தை மட்டுமல்லாமல், பரிவும் நேர்மையும் புதுமையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தையும் உருவாக்குவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் தொலைநோக்குப் பார்வை இலங்கையை உலக வரைபடத்தில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்த உதவியதாகவும், அவரின் மனிதாபிமானமும் கருணையும் அவருடன் பணியாற்றிய மற்றும் அறிந்த பலரின் வாழ்க்கையைத் தொட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அவர் எங்களுக்கு ஒரு தலைவர் மட்டுமல்ல; ஒரு ஆசான், தந்தைபோன்றவர் மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியாக இருந்தார்,” என நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவரின் மறைவு நிறுவனத்திற்கு ஆழ்ந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆனால் அவரது மதிப்புகளும் பாரம்பரியமும் எதிர்காலத்திலும் நிறுவனத்தை வழிநடத்தும் எனவும் CBL குழுமம் தெரிவித்துள்ளது.