ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் விராட் கோலி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட தொடை நரம்பு உபாதை (Hamstring Injury) காரணமாக, அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி விராட் கோலிக்கு பதிலாக இடது கை துடுப்பாட்ட வீரரான யசஷ்வி ஜெய்ஸ்வால் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி உடற்தகுதி பெற்றுவிடுவார் என நம்புவதாக இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.