17 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பல மாவட்டங்களுக்கு இன்று புதன் கிழமை இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் வகையில்  சிவப்பு மற்றும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்