இலங்கையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் சற்றே குறைந்திருந்த தங்கத்தின் விலை, நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று காலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. தற்போது மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.