நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாவதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் நிதியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதியின் விசேட உரைக்கு பின்னரே அவர் சமூகமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.