13 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

இலங்கை கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதுடன் பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்