ரவி மோகன் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவர்களது பிரிவுக்குப் பின்னணிப் பாடகி கெனிஷா தான் காரணம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இதற்கிடையே, கடந்த 16 ஆம் திகதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க ஆர்த்தி குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ரவிமோகனின் இந்த உருக்கமான பேட்டிக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.
இந்நிலையில், தான் அறிவித்தபடியே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ள நடிகர் ரவிமோகன், தற்போது ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கியுள்ளார்.
அவர் சொன்னது போலவே திரையுலகிலிருந்து விலகி, மன அமைதிக்காக ஆன்மிகப் பயணத்தில் இணைந்துள்ளதாக இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.