செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் பணியாற்றும் டேம் சியோபைன் மெக்டோனா (Dame Siobhain McDonagh) வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன்,உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்குவதற்கு’ இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
