சுவிட்சர்லாந்தில் பார்க்கிங் அறக்கட்டளை(“Fondation des Parkings) இலிருந்து வரும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து ஜூரா மாநில பொலிசார் எச்சரிக்கின்றனர். இந்த மின்னஞ்சல்களில் இல்லாத அபராதங்களை செலுத்தும்படி கோரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில், பல மோசடி மின்னஞ்சல்கள் பதிவாகியுள்ளன, அதில் பெறுநர்கள் ஒரு இணைப்பு வழியாகக் கூறப்படும் அபராதங்களைச் செலுத்துமாறு கேட்கப்படுகிறார்கள்.
இந்த “Fondation des Parkings” மின்னஞ்சல்கள் உண்மையான அபராதமாகவே மக்களுக்கு தோன்றும் வகையில் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றது.
இந்து மின்னஞ்சல் மூலம் குற்றவாளிகளின் நோக்கம் பணம் , தனிப்பட்ட தரவு மற்றும் வங்கித் தகவல்களைப் பெறுவதாகும்.
அரசாங்கத்தின் அல்லது தனியார் அதிகாரப்பூர்வ அபராதங்கள் ஒருபோதும் மின்னஞ்சல் மூலமாகவே அல்லது இணைப்புக்கள் மூலம் வசூலிக்கப்படுவதில்லை என பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் முன்அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் பணம் செலுத்தக் கோருவதில்லை எனவும் ,சந்தேகம் இருந்தால் பொலிசார் அல்லது தொடர்புடைய அதிகாரியை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ அல்லது அவற்றில் உள்ள எந்த இணைப்புகளையும்(link) கிளிக் செய்யவோ வேண்டாம் என்று பொலிசார் கேட்டுக்கொள்கின்றனர்.