எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நுகர்வைத் தொடர்ந்து திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஏ. ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.