-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்று சனிக்கிழமை இரவு களவாடப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு இன்றையதினம் வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.