பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட கொட்டா வீதி (Cotta Road) ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்புப் பணிகள் காரணமாக, களனிவெளி (Kelani Valley) ரயில் பாதையிலான சேவைகள் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 9.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (07) காலை 7.30 மணி வரை கொட்டா வீதி ரயில் கடவை வாகனப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட இடையே ரயில் சேவைகள் இயங்காது.
நாரஹேன்பிட்டவிலிருந்து அவிசாவளை நோக்கி மாலை 5.15 (ரயில் இல. 9262), மாலை 6.20 (ரயில் இல. 9264) மற்றும் இரவு 8.30 (ரயில் இல. 9271) மணிக்கு மூன்று சாதாரண ரயில்கள் பயணிக்கும்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி காலை 5.15 (ரயில் இல. 9649), காலை 5.55 (ரயில் இல. 9641) காலை 6.25 (ரயில் இல. 9651) மணிக்கு மூன்று சாதாரண ரயில்கள் பயணிக்கும்.
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.