-மஸ்கெலியா நிருபர்-
தேயிலைத் தோட்டத்தில் களைநாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது, குளவிக்கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக கலகா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான ஹந்தானை தோட்டத்தின், கித்துல்முல்ல மேல் பிரிவில் தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு களைநாசினி தெளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென கலைந்த குளவிகள் அங்கிருந்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 3 தொழிலாளர்களும் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஜி.ஜி.சந்திரசேன (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கலகா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.