கரையோர ரயில் பாதையின் ஒரு வழித்தடம் சாதாரண ரயில் போக்குவரத்திற்காக மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் ‘சாகரிகா’ ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட தடங்கல்கள் நீக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணி முதல் கரையோர ரயில் பாதையின் சாதாரண ரயில் நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.