டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் டெல்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் 27ஆம் திகதி முதற்தடவையாக டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த நிலையில், மாநிலங்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் எதிர்வரும் 11ஆம் திகதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் டெல்லி செல்லவுள்ளதுடன், இப்பயணத்தின் போது அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.