இந்திய உயர்ஸ்தானிகர் சம்பூருக்கு விஜயம்

-மூதூர் நிருபர்-

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று வெள்ளிக்கிழமை சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்து சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பதேதி திட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கத்தின் NTPC நிறுவனம் இலங்கை மின்சார சபையோடு இணைந்து சம்பூரில் இவ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.இந்நிலையிலே அவரது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய NTPC நிறுவனம் இலங்கை மின்சார சபையோடு இணைந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.50 மெகா வோட்ஸ் திட்டமான இது நீண்ட கால திட்டமாகும்.

இரண்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின் மூலம் இலங்கை மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்