திருகோணமலையில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

 

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை திருகோணமலை,  மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள அவ்வை நகர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அருட் திரு தேவகுமார் தலைமைமையில் நடைபெற்றது.

இலங்கை பாடசாலை அதிபர்  பஞ்சாட்சரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் பாடசாலை குழந்தைகளுக்கு,  ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் தரம் ஆறிலிருந்து பதினொன்று வரை படிக்கும் 43 மாணவர்கள் பயன் அடைந்தார்கள்