2026 ஆம் ஆண்டுக்கான கல்முனை வலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இப்போட்டியில் இடம்பெற்ற முக்கியமான இரண்டு போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம், பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.எ. ஆபாக் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.