தம்பலகாமம் பிரதேச செயலக கணக்காய்வு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2024 ஆம் ஆண்டின் 1ஆம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு குழு கூட்டம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று புதன் கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் செயற்பாட்டு விடயங்கள் தொடர்பிலும் எதிர்கால விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் மற்றும் கணக்காய்வு அத்தியட்சகர் வை.பி(B). நிஸார் உட்பட உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிளைத் தலைவர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்