இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்கள்

சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) அறிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 16) மற்றும் நாளை (ஏப்ரல் 17) நாவலவில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://forms.gle/8DzuH5LUooxg4czE6  இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, நேர்காணலுக்காக அவர்களின் பாஸ்போர்ட்டுடன் கல்வி பொது தரா தர உயர்தர பரீட்சை சான்றிதழ் அல்லது IELTS சான்றிதழைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன ஹாட்லைன் 011-2800407 மூலம் மேற்கொள்ளலாம்.

 

AUXILARY POLICE OFFICER- Singapore

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்