ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அழைப்பிற்கு இணங்க, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) அரச விஜயம் மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு வருகை தந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) உள்ளிட்ட இராஜதந்திர தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அமோகமாக வரவேற்றார்.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி டோ லாம் (To Lam) உடன் வியட்நாம் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.