ஒன்லைன் மோசடி: 167 பேர் கைது

10

ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கியுள்ளனர்.

இக்குழுவினர் பிட்காயின் ஊடாக இணையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கியிருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமளவான வெளிநாட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath