வலம்புரி சங்குகளுடன் ஒருவர் புத்தளத்தில் கைது

புத்தளம் – பாலாவி பகுதியில் வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர் புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளத்கொஹூபிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வலம்புரி சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர் அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த வலம்புரி சங்குகளை வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் குறித்த வலம்புரிகளை கொழும்பில் தனது பெற்றோர் வாங்கி வீட்டில் வைத்திருந்ததாக சந்தேக நபர் விசரணையின் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வலம்புரியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்