உலகச் சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) பெரல் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகூடிய விலையாகக் கருதப்படுகிறது.
ஈரானியத் துறைமுகங்களை முடக்கும் செயல்முறை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த சமிக்ஞை இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருப்பது, பிராந்திய மோதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் இந்த பதற்றமான சூழல் காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன.