அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற, இலங்கை கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் படகில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதாகவும், அதன் போது படகில் தடுமாறி அவர் விழுந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்