மட்டு பாடும் மீன் சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு பாடும் மீன் சமர் என்று அழைக்கப்படும் மாபெரும் மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கும் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் இடையில் 11 ஆவது வருடமாக மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியாக இது இடம் பெறுகின்றது.

20 ஓவர்களை கொண்ட இந்த சுற்றுப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை களத்தடுப்பை மேற்கொண்டுள்ளது.

வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி.ரி.உதயகுமார் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்