பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

-பதுளை நிருபர்-

பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவா பரணகம, யஹலகமுவ பகுதியை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை நகரிலிருந்து பயணித்த தனியார் பேருந்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சாரதி ஒருவர் நேற்று புதன் கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​கஞ்சாவை வேறு ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும், விசாரணையின்படி, கஞ்சா விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர் யஹலகமுவ வீதியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடம் இருந்து 26 கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த எடை 23400 மில்லி கிராமாக காணப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபான மற்றும் வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்