பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை பெற்றுத் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது 11 குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் குழாய்கள் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகளை ஒரு மாத காலப்பகுதியில் மூன்றாவது முறையாக இன்று வழங்கப்பட்டுள்ளது.

இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் திருகோணமலையில் வைத்து வழங்கி வைத்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்