இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 200 ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது.

இதில் நூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை தமது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எனினும் சில ஆளில்லா விமானங்களும் ஏவுகணைகளும் இஸ்ரேலில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதன் காரணமாக சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

முன்னதாக டமாஸ்கஸில் உள்ள தனது தூதரக வளாகத்தில் மூத்த ஈரானிய இராணுவ அதிகாரிகளைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்ததால், காசாவில் பல மாதங்களாக நீடித்த பதற்றம் தற்போது ஈரான்- இஸ்ரேல் போராக மாற்றமடைந்துள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை அடுத்து அந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலை குறிவைத்து ஆளில்லா விமானங்களை இடைமறிக்க உதவியுள்ளன.

மேற்கத்திய தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தாக்குதல் பற்றி விவாதிப்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்