HIV தொற்றுடைய பாலியல் தொழிலாளி : உறவு கொண்ட ஆண்களை வலைவீசி தேடும் பொலிஸார்

தனக்கு எச் ஐ வீ எயிட்ஸ் (HIV) இருப்பது தெரிந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் பாலியல் தொழிலாளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மரியெட்டா என்ற நகரில் லிண்டா லெக்செஸ் என்ற பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி எச் ஐ வீ எயிட்ஸ் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அப்படியிருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பல மாநிலங்களிலிருந்து வந்த 211 ஆண்களுடன் இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது குறித்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட அனைத்து ஆண்களையும் தேடும் பணியில் பொலிஸார்ர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் லிண்டா லெக்செஸுடன் உடலுறவு வைத்துக்கொண்ட ஆண்கள் உடனே சென்று HIV டெஸ்ட் எடுத்துக்கொள்ளுமாறும், அவர்களது அடையாளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்றும் பொலிஸார் மற்றும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பயப்பட வேண்டாம் எனவும், இது பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் பரிசோதனை தான் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து லிண்டா லெக்செஸை குற்ற வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்