இலங்கையில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 384,000 ரூபாயாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின்னர் மேலும் 2,000 ரூபாயால் விலை அதிகரித்ததன் காரணமாக, 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,388 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, இன்று மட்டும் 24 கரட் தங்கத்தின் பவுண் விலையில் மொத்தமாக 4,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.