வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: 179 பேர் பலி

8

பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காணாமல் போயுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath