வாகனங்களை ஒப்படைத்தார் டயானா

முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

எதிர் வரும் 21ஆம் திகதி ஆவணங்களை ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அவர் ஒப்படைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சருக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்