ஹொரணை – படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காயமடைந்த மேலும் 6 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.