வாகன விபத்து: 18 வயது இளைஞன் பலி

22

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று காலை அவிசாவளை நோக்கி சென்ற லொறியின் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறி லொறியின் பின்பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன (வயது – 18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath