பெண்ணுக்கு இரண்டாவது திருமணம், ஆணுக்கு நான்காவது திருமணம்: கிணற்றில் சடலமாக மிதந்த குழந்தை

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கண்டல் குடா பகுதியை சேர்ந்த பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்களால் நேற்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வறுமையினால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக தாய் தனது குழந்தையை இவ்வாறு கிணற்றில் வீசியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதுடன், அந்த பெண்ணின் கணவனுக்கு இது நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்