![](https://minnal24.com/wp-content/uploads/2024/05/Untitled-design-33.png)
கரட் துண்டு சிக்கி குழந்தை மரணம்
அனுராதபுரம் பகுதியில் கரட் துண்டு தொண்டையில் சிக்கியதில் குழந்தை உயிர் இழந்துள்ளது.
சாலியவெவ பகுதியை சேர்ந்த 19 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிர் இழந்தது.
கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது குழந்தையின் தொண்டையில் கரட் சிக்கிய நிலையில் பெற்றோர் 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்இ ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்