கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான திகதியுடனும் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சில வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றின் தரம் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்