-யாழ் நிருபர்-
அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றாக பங்குனித் திங்கள் உத்தரம் காணப்படுகிறது. இந்த உற்சவமானது பங்குனி மாதத்தில் வரும் 4 திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும்.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உத்தர உற்சவம் நடைபெற்றது.
இதன்போது பக்தர்கள் ஆலய கேணியில் நீராடிவிட்டு, அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



