வயல்வெளியில் ஆணின் சடலம் மீட்பு
உரகஸ்மன்ஹந்திய, ஹிரிகும்புர பிரதேசத்தில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
சடலமாக மீட்கப்பட்டவர் 36 வயதுடைய அன்னாசிகலகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது .
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்