யால வனப்பகுதியில் கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் முன்னெடுத்து செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கஞ்சா பயிர்ச்செய்கை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், 60 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் பெறுமதி கொண்ட 21,260 காய்ந்த கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்