மின்னல் தாக்கம்: சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம், குறித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்