மனைவியை மிரட்டிய நபர்: பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
வாத்துவை – மொல்லிகொட பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசார் முன்னிலையில் தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டிய நபர் மீதே பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்