மட்டக்களப்பில் போதை பொருட்களுடன் சிக்கிய இருவர்

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளdர்.

இதன்போது, காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 5 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளின் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப் பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென் பானம் நிறுவனம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்