மட்டக்களப்பில் தவறான முடிவு எடுத்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

 

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்