அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) காலாண்டு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண (T20 வடிவம்) தொடர், திட்டமிடப்பட்ட ஜூன்-ஜூலை காலப்பகுதிக்கு பதிலாக, பெப்ரவரி 14 முதல் 28 வரை நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
நிர்வாக ரீதியான ஒழுங்கீனம் மற்றும் கடமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கனடா கிரிக்கெட் சபையின் (Cricket Canada) உறுப்பினர் அந்தஸ்தை ஐசிசி அதிரடியாக இடைநிறுத்தியுள்ளது.
இருப்பினும், கனடா நாட்டின் வீரர்களின் நலன் கருதி அவர்கள் ஐசிசி தொடர்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிதி நேரடியாக ஐசிசி நிர்வாகத்தின் கீழ் வழங்கப்படும்.
பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அண்மைக்கால நிர்வாக மாற்றங்கள் மற்றும் அரசாங்க தலையீடுகள் குறித்து ஆராய ஐசிசி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷிற்கு முகமது மூசாஜீ மற்றும் தவெங்வா முகுஹ்லானி ஆகியோரும், இலங்கைக்கு இம்ரான் க்வாஜா மற்றும் தேவஜித் சய்கியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளின் போது போதிய வெளிச்சமின்மையால் (Bad Light) ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, இரு அணிகளின் சம்மதத்துடன் சிவப்பு பந்துக்கு பதிலாக பிங்க் நிற பந்தைப் பயன்படுத்தி போட்டியைத் தொடர்வதற்கான புதிய சோதனை முயற்சிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.